
இலங்கை தொடர்
இந்த தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தேர்வுக்குழு வராததால் சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வுக்குழுவை அறிவிக்கவுள்ளனர். அதன்படி ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

விராட் கோலி கடிதம்
இந்நிலையில் விராட் கோலி எடுத்துள்ள முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இனி டி20 கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார். இதனால் இலங்கை டி20 தொடரில் கோலி நிச்சயம் ஆடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

தற்காலிக முடிவு
34 வயதாகும் விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்கு பின், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் மற்ற வடிவ கிரிக்கெட்களில் மட்டுமே ஆட வைக்கவுள்ளதாகவும் பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்போது தற்காலிகமாக தான் ஓய்வு கேட்டுள்ளார். முக்கியமான போட்டிகளின் போது அணிக்கு திரும்புவார்.

ரோகித்தின் நிலைமை
விராட் கோலியோடு சேர்த்து ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைமை தான் உள்ளது. 36 வயதாகும் அவர் முழு ஓய்வையே அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் ஜனவரியில் வரவுள்ள இலங்கை தொடரின் முதலே ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications