
சிறப்பான டாம் பெஸ்
முதல் இன்னிங்சில் 578 ரன்களை இங்கிலாந்து குவித்த நிலையில் அணியின் பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் அவுட் மிகவும் முக்கியமானது என்றும் அந்த விக்கெட் தனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறப்பான பந்துவீச்சு
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்து தற்போது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 578 ரன்களை குவித்ததுடன் சிறப்பான பந்து வீச்சையும் வெளிப்படுத்தியுள்ளது.

வீழ்த்திய டாம் பெஸ்
குறிப்பாக அணியின் பௌலர் டாம் பெஸ் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் அவுட் மிகவும் சிறப்பானது என்றும் இளம் வீரரான தனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் டாம் பெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலக தரத்திலான வீரர்
விராட் கோலி தனித்துவமான மற்றும் உலக தரத்திலான வீரர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்த இன்னிங்சிலும் விராட் கோலியை விரைவிலேயே அவுட் ஆக்குவதற்கு தான் செயலாற்ற உள்ளதாகவும் பெஸ் கூறியுள்ளார். தான் கற்றுள்ள அனுபவ பாடங்களை இந்த தொடரில் தான் சிறப்பாக பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications