
கேப்டன்சி பிரச்சினை
விராட் கோலியை கேப்டன்சியில் இருந்து யாரும் நீக்கவில்லை, அவரே தான் விருப்பப்பட்டு பதவி விலகினார் என அப்போதைய தலைவர் கங்குலி கூறியிருந்தார். ஆனால் தனக்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை, கங்குலி என்னிடம் எதையுமே பேசவில்லை என கோலி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் யார் கூறுவது உண்மை என புரியாமல் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஓடிவிட்டது.

சேத்தன் சர்மாவின் தகவல்
ஆனால் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய சேத்தன், சவுரவ் கங்குலிக்கு விராட் கோலி என்றால் பிடிக்கவே பிடிக்காது. ஆலோசனை கூட்டத்தின் போது கோலி கூறிய கருத்தை ஒருமுறை கங்குலி விமர்சித்தார். அப்போது இருந்து இந்த பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது. இதனால் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். உண்மையை சொல்லப்போனால் கேப்டன்சி விவகாரத்தில் ரோகித்திற்கு ஆதரவாக பிசிசிஐ செயல்படவில்லை. விராட் கோலி எதிராக நாங்கள் செயல்பட்டோம் எனக்கூறலாம். மோசமான ஃபார்மை பயன்படுத்தி அவரை நீக்கிவிட்டோம் எனக்கூறியுள்ளார்.

கோலிக்கு கொடுமை
ஒரு வீரருக்கு எதிராக ஒட்டுமொத்த கிரிக்கெட் வாரியமே செயல்பட்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் விராட் கோலி பத்திரிகைகளில் உண்மையை கூறாமல், பெருந்தன்மையாக நான் பதவி விலகினேன் தான். ஆனால் என்னை யாரும் மறுபரிசீலனை செய்ய சொல்லவில்லை என மறைமுகமாக வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

கோலியின் ரியாக்ஷன்
இந்நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து விராட் கோலி பதிவு ஒன்றை போட்டுள்ளார். காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள கோலி, நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி மைதானத்திற்கு செல்கிறேன். 'Nostalgic' உணர்வாக இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு ஆங்கில வார்த்தையின் மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் அவர் பதில் கூறியுள்ளார்.

என்ன அர்த்தம்?
அதாவது Nostalgic என்ற வார்த்தைக்கு அர்த்தம், கடந்த காலங்களில் நடந்த நல்லது அல்லது கொடுமையான விஷயங்களை தற்போது நினைத்து பார்த்து நெகிழ்ச்சி அடைவது ஆகும். அந்தவகையில் விராட் கோலியும் தனக்கு நடந்த கொடுமைகளுக்கு தற்போது நியாயம் கிடைத்துவிட்டது போன்ற உணர்வு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











