
ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வெள்ளைப்பந்து அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், ஃபிஞ்ச்-ஆல் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஓய்வு முடிவை கையில் எடுத்துள்ளார்.

கடைசி போட்டி
அந்தவகையில் முதலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவே ஃபிஞ்சின் கடைசி ஒருநாள் கிரிக்கெட்டாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் விலகவுள்ளதாக தெரிகிறது.

கோலி வாழ்த்து
இந்நிலையில் ஃபிஞ்ச்-க்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், " சிறப்பான முடிவை எடுத்துள்ளீர்கள் ஃபிஞ்ச். உங்களுக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். ஆர்சியில் உங்களுடன் சேர்ந்து விளையாடியது மகிழ்ச்சி. வாழ்கையின் அடுத்த கட்டத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்த வாழ்த்துக்கள் என கோலி கூறியுள்ளார்.

கிரிக்கெட் பயணங்கள்
35 வயதாகும் ஆரோன் ஃபிஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிஞ்ச் 5401 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2,855 ரன்களும் விளாசியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 278 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும், ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











