For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சிருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க!

அபுதாபி : நேற்றைய ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.

இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் இறுதி 5 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டதாகவும் ஆர்சிபி 20 ரன்களை அதிகமாக அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்?!அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்?!

164 ரன்களில் சுருண்ட ஆர்சிபி

164 ரன்களில் சுருண்ட ஆர்சிபி

ஐபிஎல்லின் 48வது லீக் போட்டி நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்ற நிலையில் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், பேட்டிங் செய்த ஆர்சிபி 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா

3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்சிபியின் தேவ்தத் படிக்கல் 74, ஜோஷ் பிலிப் 33 ரன்கள் அடித்து அதிரடி ஆரம்பத்தை கொடுத்த நிலையிலும் ஆர்சிபி 164 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தது.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

இதனிடையே, எதிரணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசியதாகவும் தாங்கள் அதிகமாக 20 ரன்களை எடுத்திருந்தால் வெற்றியை பெற்றிருக்கலாம் என்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இறுதி 5 ஓவர்களில் தங்களது ரன்குவிப்பை மும்பை பௌலர்கள் கட்டுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பு

மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பு

17வது ஓவர்கள் வரையில் வெற்றிக்கான வாய்ப்பு ஆர்சிபிக்கு இருந்ததாகவும் தங்களது பௌலர்களும் சிறப்பாக பந்து வீசியதாகவும் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கோலி மேலும் கூறினார். தற்போதைய ஐபிஎல் சீசனில் இறுதிநிலையில் இருந்த அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Story first published: Thursday, October 29, 2020, 8:53 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
Mumbai Indians batsmen did a good job -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X