டெல்லி: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பல சாதனைகளைப் புரிந்துள்ளார். அதில் மேலும் ஒரு சாதனையாக அவர் பிட்ச்சில் கிட்டத்தட்ட 1000 நிமிடம் வரை செலவழித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் புதிய ரன் மெஷினாக மாறியுள்ள கோஹ்லி, இந்த ஐபிஎல் தொடரில் ரன்களைக் குவித்து அசத்தி விட்டார். 900த்து சொச்சம் ரன்களைக் குவித்து அசத்திய கோஹ்லி பிட்ச்சிலும் அதிக நேரம் நின்று புதிய சாதனை படைத்துள்ளார்.
தனி ஒரு வீரராக தொடர் முழுவதும் பெங்களூரு அணியை சிறப்பாக வழி நடத்தி இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றவர் கோஹ்லிதான். அவரும் டிவில்லியர்ஸும்தான் அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முக்கியக் காரணம்.
விராத் கோஹ்லி இந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 1000 நிமிடத்திற்கும் மேலாக பிட்ச்சில் செலவழித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். டி20 போட்டிகளில் இது அரிய சாதனையாகும்.