
கேப்டன்சி மாற்றம்
எம்.எஸ்.தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த போதும், அவரின் செயல்பாட்டில் குறைகள் இருந்தன. இதனால் அவர் கேப்டன்சியில் இருந்து விலகினார். 2021ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் டி20 கேப்டன்சியில் இருந்தும், 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். ஒருநாள் கிரிக்கெட்டிற்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

விராட் கோலி கருத்து
இந்நிலையில் அந்த மாற்றம் எப்படி இருந்தது என விராட் கோலி பேசியுள்ளார். அதில், எனக்கு எந்த சிரமும் இல்லை என்று கூறுவது நிச்சயமாக பொய்யாக தான் இருக்கும். நாம் தான் இனி பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு சென்றவுடன் மீண்டும் பழைய நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பது சாதாரணம் அல்ல. நிறைய நேரம் அதற்கு எடுத்துக்கொண்டது. நமக்கு வேண்டாம் என முடிவெடுத்த பின்னர் அதனை யோசித்துக்கொண்டேவும் இருக்கக்கூடாது.

நிதானம் தேவை
சில சமயங்களில் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அது செய்யலாம் இது செய்யலாம் என்று தோன்றும். அதன்பின்னர் திட்டம் ஏற்கனவே போடப்பட்டு விட்டது. நாம் நிதானமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன். கடினமான சூழல்களில் நான் எப்போதுமே முடிவெடுக்க அங்கு இருந்துள்ளேன். தற்போதெல்லாம் புரிந்துக்கொண்டு கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.

ஆர்சிபி அணி கேப்டன்சி
ஆர்சிபி அணி குறித்து பேசிய கோலி, பல சமயங்களில் நான் டூப்ளசிஸிடம் சென்று, அந்த விஷயத்தை செய்தால் சரியாக இருக்கும் என அறிவுரை கூறுவேன். சில சமயங்களில் அவர் ஏற்றுக்கொள்வார். சில சமயங்களில் செய்ய விருப்பமில்லை என சரியான காரணத்துடன் கூறிவிடுவார். அதுவும் மிகவும் மரியாதையாக, காயம் ஏற்படுத்தாமல் கூறுவார் என கோலி கூறினார்.


Click it and Unblock the Notifications











