
இந்திய வீரர்கள்
இந்திய அணியை பொறுத்தவரையில் விராட் கோலியின் மீது தான் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள கோலி, கடைசியாக விளையாடிய இங்கிலாந்து தொடரில் அதிகபட்சமாக 20 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரை புறக்கணித்த அவர் நீண்ட ஓய்வுக்கு பின் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோலி தீவிர பயிற்சி
இந்நிலையில் பயிற்சி முகாமில் விராட் கோலி காட்டிய அதிரடியால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலமாக விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறி வருகிறார். எனவே வலைபயிற்சியில் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களான அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரின் பவுலிங்கை பொளந்துக்கட்டினார்.

ஷாட் செலக்ஷன்
வழக்கமாக ட்ரைவ் ஷாட்களை விளையாடும் கோலி, அவுட்சைட் பந்துகளை தைரியமாக களமிறங்கி ஸ்ட்ரைட்டில் சிக்ஸர்களை அடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஆசிய கோப்பையில் இருந்து விராட் கோலி "ஸ்பெஷல் கோல்ட் விசார்ட் குவாலிட்டி" என்ற வகை பேட்டை பயன்படுத்தவுள்ளார். இதில் தான் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
ரோகித் மகிழ்ச்சி
விராட் கோலியின் ஷாட் செலக்ஷன் மற்றும் தைரியத்தை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வழக்கமாக பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் கோலி, இந்த முறை அந்த அணிக்கு எதிராகவே கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











