
கோலி சாதனை
அதாவது சொந்த மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். பாண்டிங் 5,406 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அதனை முறியடித்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முந்தியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்களுடன் உள்ளார்.

கோலிக்கு தெரியும்
இந்த நிலையில் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி வெற்றிகரமாக இருக்கிறார் என்பது குறித்து ரவி சாஸ்திரியும் கவாஸ்கரும் பேசினர். இதில் முதலில் பேசிய கவாஸ்கர் விராட் கோலி சேசிங் மாஸ்டர் என்று பாராட்டியுள்ளார். விராட் கோலிக்கு எப்போது அடித்து ஆட வேண்டும்? எப்போது மெதுவாக விளையாட வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரியும் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

கோலியின் ஷாட்
கவாஸ்கர் அதன் மூலம் அவர் வெற்றிகரமாக தங்களை துரத்தி வருவதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, விராட் கோலி ஒரு காலத்தில் விளையாடும் போது பந்தை தூக்கி அடிக்க மாட்டார். தரையில் பந்து செல்லும் மாதிரி தன்னுடைய ஷாட்டை அவர் பயன்படுத்துவார் என குறிப்பிட்டார். அதன் பிறகு அதிரடியாக ஆட விராட் கோலி கற்றுக் கொண்டதாகவும், ஆனால் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி வெற்றி கண்டதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பவுலரை தேர்வு செய்வார்
விராட் கோலி அனைத்து பந்துவீச்சாளர்களையும் அடிக்க மாட்டார் என்று விளக்கம் அளித்துள்ள அவர் எந்த பவுலரிடம் அமைதி காக்க வேண்டும். எந்த பவுலரை அடிக்க வேண்டும். சூழலுக்கு ஏற்ப எப்படி ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என விராட் கோலிக்கு நன்கு தெரியும் எனவும் ரவி சாஸ்திரி பாராட்டிருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் கே எல் ராகுல் பொறுப்பாக விளையாடி தொடங்கியதும் திடீரென்று அதிரடியாக ஆடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











