
டெஸ்ட் வீரர்கள்
இதேபோல் டெஸ்ட மேட்ச் விளையாடும் வீரர்களுக்கு ரூ.15 லட்சமும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ. 3 லட்சமும் ஊதியமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ரவி சாஸ்திரி அதிருப்தி
இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ உயர்த்தியுள்ள ஊதியத்தை வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. வேர்க்கடலைக்கு ஒப்பானது. எனவே அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கோஹ்லியும் அதிருப்தி
இதேபோல் வீரர்களின் ஊதியத்தால் அதிருப்தி அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

5 கோடி கொடுங்க
எனவே ஏ கிரேடில் உள்ள இந்திய வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











