
புதிய சர்ச்சை
இந்த போட்டியின் 2வது நாளான நேற்று மாலை வங்கதேசம் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது. மாலை நேரத்தில் வெளிச்சம் குறைந்துக்கொண்டே வந்ததால் ஓவர்கள் மளமளவென போடப்பட்டது. ஆனால் எதிரணி வீரர் ஷாண்டோ செய்த காரியத்தால் அது நிறைவேறவில்லை. 6வது ஓவரின் 5வது பந்தின் போது திடீரென ஆட்டத்தை நிறுத்திய அவர், ஷூ லேஸினை கட்டுகிறேன் எனக்கூறிவிட்டு சிறிது நேரம் கீழே குனிந்துக்கொண்டு இருந்தார். இதனால் வெளிச்சமின்மை எனக்கூறி ஓவர் முடிவதற்குள்ளே ஆட்டம் முடிக்கப்பட்டது.

கோலி ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, எதற்கு ஷூ லேஸ் எனக்கூறி கொண்டு இருக்கிறாய், முடிந்தால் ஆடையையும் கழட்டிவிட்டு இன்னும் தாமதம் செய்யலாம், வீண் முயற்சிகள் வேண்டாம் எனக்கூறினார். இதனை வாய் வார்த்தை மட்டுமின்றி, செய்கையிலும் காட்டியதால் ரசிகர்களுக்கு அப்படியே தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கெல்லாம் கோபமா?
ஷூ லேஸ் கட்டியதற்கெல்லாம் கோபமா என்ற கேள்வி எழலாம். ஆனால் ஷாண்டோ அதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களையும் முயற்சி செய்தார். 2வது இன்னிங்ஸின் போது, ஷாண்டோ பேட்டை மாற்ற வேண்டும் எனக்கூறி கொண்டு வரச்சொன்னார். நிறைய பேட்கள் கொண்டு வந்து காட்டிய பிறகு, கடைசியில் தனது பழைய பேட்டையே மீண்டும் பயன்படுத்தினார். இதனால் அவர் நேரம் கட்டத்துவது தெளிவாக தெரிந்தது. இதுதான் கோலியின் கோபத்திற்கு காரணம்.

ஸ்கோரின் விவரம்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 314 ரன்களை எடுத்தது. இதனால் 87 ரன்கள் பின்னடைவாக வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications