
அணியிலிருந்து நீக்கம்
2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் முதல் 4 போட்டியில் விளையாடிய நான், அரைசதம் அடிக்க வில்லை என்ற காரணத்தால் தோனி என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு சச்சின், கம்பீர், ராபின் உத்தப்பாவை தொடக்கத்திலும், ரோகித் சர்மா, யுவராஜ், தோனி ஆகியோர் நடுவரிசையிலும் விளையாடினர்.

எதிர்மறையான எண்ணம்
இதனை பார்த்ததும், இனி நமக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்காது என்று எண்ணி கொண்டேன். எதிர்மறையான எண்ணங்கள் என் மனதை ஆக்கிரமிப்பு செய்தது. ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கும் இப்படி ஒரு சூழல் ஏற்படும். அந்த தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு இந்தியா வந்ததும யோசித்தேன்.

ஓய்வு பெற நினைத்தேன்
இனி இடம் கிடைக்காது, நாமே ஓய்வு பெற்று வெளியேறி விடவோம் என்று நினைத்தேன். சச்சின் தான் என் முடிவில் தலையிட்டு என்னை ஓய்வு பெற விடாமல் தடுத்தார். இது குறித்து அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் பேச சொன்னார். நான் ஸ்ரீகாந்திடம், என்னை தொடர்ந்து அணியில் எடுக்க வேண்டும் என்று உறுதி கொடுங்கள், இல்லையேனில் ஓய்வு பெறுகிறேன் என்று கேட்டேன்.

தோனியின் வாக்குறுதி
அப்போது ஸ்ரீகாந்தும், காலம் மாறிவிட்டது, உனக்காக வேண்டும் என்றால் தோனியிடம் பேசுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு தோனியே, தம்மிடம் நீங்கள் அனைத்து போட்டியிலும் விளையாடுவீர்கள் என உறுதி அளித்தார். அதன் பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்து மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாடி ரன்கள் குவித்தேன் என்று சேவாக் கூறினார்.


Click it and Unblock the Notifications











