சொதப்பல் பன்ட்
ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் 4வது வரிசையில் இறங்கிய பன்ட், சொதப்பி தள்ளினார். ஒரு போட்டியில் 20 ரன்கள் அடித்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். டெஸ்டியிலும் இதே நிலைமை தான். மொத்தத்தில் சரியாகவே ஆடவில்லை.
அதிக நம்பிக்கை
2 இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். முதல் இன்னிங்சில் 24 ரன்கள், 2வது இன்னிங்சில் வெறும் 7 ரன்கள். ரிஷப் பன்ட் நிலையான ஆட்டத்தை வெளிக் கொணர வேண்டும். அப்போதுதான் அணி நிர்வாகம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
அவர் திறமைசாலி
இந்நிலையில், ரிஷப் பன்ட் குறித்து முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ரிஷப் பன்ட் மிகச் சிறந்த திறமைசாலி. அபார பேட்ஸ்மேன். ஆனால் அவர் இன்னும் தம்மை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
அறிவுரை
இந்திய அணியில் தொடர்ந்து இருந்துவருவதால், அணியுடன் இருக்கும் சூழலையும் அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார்.