மழை குறுக்கிட்டது
சேவாக் என்ன கூறினார் என்பதை பார்க்கும் முன்பு முதல் டி20 யில் இந்தியாவின் இலக்கு எப்படி நிர்ணயிக்கப்பட்டது என பார்க்கலாம். முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்கள் ஆடி முடித்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது அந்த அணி.
இந்திய அணி இலக்கு மாற்றம்
டக்வொர்த் - லெவிஸ் - ஸ்டெர்ன் முறைப்படி இந்திய அணியின் இலக்கு 17 ஓவர்களில் 174 என மாற்றப்பட்டது. இதை சேஸ் செய்த இந்தியா 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதிக ரன்கள் எடுத்தும் தோல்வி
ஆஸ்திரேலியாவை விட இந்தியா அதிக ரன்கள் எடுத்தும் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா தோல்வி அடைந்தது என்ற விஷயத்தை பிடித்துக் கொண்டார் சேவாக். இதை தன் பாணியில் கூறியுள்ளார்.
|
இப்படி ஜிஎஸ்டி சேர்த்துட்டீங்களே
"இந்தியா ஆஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோருடன் ஜிஎஸ்டி சேர்த்து விட்டார்கள். ஆனால், போட்டி சுவாரஸ்யமாக ஆக இருந்தது" என கூறியுள்ளார் சேவாக். ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் எடுத்த 158 ரன்களோடு 15 ரன்களை டிஎல்எஸ் முறைப்படி சேர்த்துக் கொண்டதை தான் ஜிஎஸ்டி போட்டு விட்டார்கள் என கலாய்த்துள்ளார் சேவாக்.