அகர்காருக்கு ஆப்பு ரெடி.. புதிய தேர்வுக்குழுத் தலைவராக ஜாம்பவான் வீரர் நியமிக்கப்பட வாய்ப்பு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முகாமின் தலைவர் அஜித் அகர்கரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது பதவிக் காலம் வரும் 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், பிசிசிஐ அவருக்கு மேலும் பணிநீட்டிப்பு வழங்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் எழுந்துள்ளன. அகர்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க பிசிசிஐ மறுத்தால், அவருக்குப் பதிலாக இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லக்ஷ்மண் புதிய தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தோல்விகள் காரணமாகவே, அகர்கரின் பதவிக்காலத்தை 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை நீட்டிக்கும் முடிவை பிசிசிஐ மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து எழுந்த சர்ச்சை, பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதுவே தேர்வு செய்யும் குழுவின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இருப்பினும், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும், அங்கு அகர்கரின் எதிர்காலம் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகர்கருக்கு பணிநீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை. இந்தியாவின் வரவிருக்கும் இலங்கைக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணம், பிசிசிஐ தனது இறுதி முடிவை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான அகர்கரும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை தலைமைத் தேர்வாளராக நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
2023 இல் அகர்கர் பொறுப்பேற்றது முதல் அவரது பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமானதாகவே இருந்துள்ளது. அவரது தலைமையிலான தேர்வுக் குழுவின் கீழ் இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று மிக முக்கிய ஐசிசி பட்டங்களை வென்று சாதனை படைத்தது.
இந்த சூழுலில் முகமது ஷமி, சர்பராஸ் கான், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களை அகர்கார் தொடர்ந்து புறக்கணிப்பதும், கோலி, ரோகித் போன்ற சீனியர் வீரரிகளை கையாளும் விதமும் சர்ச்சையை ஏற்படுத்தயுள்ளது. மற்றொருபுறம், வி.வி.எஸ். லக்ஷ்மண் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கிரிக்கெட் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்திய வீரர்களின் மேம்பாட்டுப் பாதையை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றி வருகிறார். சமீபத்தில் கெளதம் கம்பீருக்கு ஓய்வளிக்கப்பட்டபோது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராகவும் லக்ஷ்மண் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

