விசாகபட்டினம்: தினமும் விழித்ததும் தாய்க்கு நன்றி சொல்லுங்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது அதாவது கடைசி ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை, விசாகபட்டினத்தில் நடைபெற்றது. அப்போது தனது தாய் பெயரான தேவகி என்ற பெயரை ஜெர்சியில் பொறித்தபடி ஆடினார் டோணி.

போட்டியையொட்டி நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் பேசிய டோணி, சுதந்திரதினம், குடியரசு தினங்களில் ராணுவத்தை நாம் நினைவு கூர்கிறோம். ஆனால், தினமும் ராணுவத்தினர் நமக்காக ஆற்றும் பணி அதிகம். அவர்களை தினமும் நினைவுகூர வேண்டும். அதேபோலத்தான், தாயும். தந்தை முக்கியமில்லையா என கேட்க கூடாது. தந்தையும் முக்கியம். ஆனால் தாயின் பங்களிப்பு மிக அதிகம். எனவே தினமும் காலையில் விழித்ததும், தாய்க்கு நன்றி (மனதிலாவது) சொல்லிக்கொள்ள பழக வேண்டும் என்றார் டோணி.