அச்சச்சோ பாப்பா பயந்து போச்சே
இடி மின்னல் சத்தத்தைக் கேட்டு தனது மகள் பயந்து போய் விட்டதைப் படம் எடுத்துப் போட்டுள்ளார் வார்னர். அதில், இடி, மின்னல் சத்தத்திற்கு யாரோ சிலர் (மகளைத்தான் சொல்கிறார்) பயந்துட்டாங்க. மேல் வீட்டுக்காரர் ரொம்பக் கோபமாக இருக்கிறார் போல என்று போட்டுள்ளார்.

பாப்பா முகத்தைக் காணோமே
அந்தப் புகைப்படத்தில் படுக்கையில் தலையணைக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்திருக்கிறது குட்டிப் பாப்பா ஐவி. அருகில் படுத்தபடி படம் எடுத்துள்ளார் அப்பா வார்னர்.

ஏற்கனவே வந்திருக்கேனே
இந்தியாவுக்கு ஐவி பாப்பா வருவது முதல் முறையல்ல. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போதும் பெங்களூரு போட்டிக்கு தனது மகளைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார் வார்னர். அப்போது பெங்களூரு சாலையில் தனது மகளுடன் வாக்கிங் போயிருந்தார்.
அது பாட்டுக்கு விளையாடியது
அப்போது ரசிகர்கள் வார்னரைச் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்க, ஐவி குட்டி பராக்கு பார்த்தபடியும், தனது அப்பாவை ஏன் இத்தனை பேர் சூழ்ந்து கொண்டுள்ளனர் என்று வேடிக்கையாக பார்த்தபடியும் உலாத்திய காட்சி மறக்க முடியாதது.


Click it and Unblock the Notifications











