மும்பை: காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முன்னதாக அயர்லாந்துடன் 2 டி 20 போட்டிகளில் இந்தியா ஆடியது. இரண்டிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது.
வாஷிங்டன் சுந்தர் காயம்
இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் குருனாள் பாண்டியா மற்றும் ஒருநாள் போட்டிகளில் அக்சார் படேல் களமிறங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்தில் விளையாடி வருகின்றனர்.