ராசி இல்லாத தமிழக வீரர்.. இவருக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது.. SA ODI தொடரை தவறவிடுகிறார்..??
சென்னை: 130 கோடி மக்கள் இருக்கும் இந்திய நாட்டில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம்
திறமையும், விடா முயற்சியும் கொஞ்சம் லக்கும் இருந்தால் அந்த கடின வாய்ப்பு நம் வீட்டு கதவை வந்து தட்டும்
அப்படிப்பட்ட வாய்ப்பு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு 17 வயதில் கிடைத்தது. ஆனால் அவரால் தொடர்ச்சியாக அந்த வாய்ப்பை தக்க வைக்க முடியவில்லை.

ஆஸி. மண்ணில் கலக்கல்
சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டே இந்திய அணியில் இடம்பிடித்தார். இதுவரை 4 டெஸ்ட்டில் விளையாடி 3 அரைசதம் அடித்து இந்திய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் காப்பாற்றியுள்ளார். இவருக்கு இருக்க வேண்டிய திறமைக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்திருக்க வேண்டும்

10 மாதம் ஓய்வு
ஆனால் எப்போது எல்லாம், இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் இவருக்கு காயம் ஏற்பட்டு விடும். ஆஸ்திரேலிய மண்ணில் இவர் செய்த சாதனைக்கு, இந்நேரம் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயஆனால் எப்போதெல்லாம், இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இவருக்கு காயம் ஏற்பட்டு விடும். ஆஸ்திரேலிய மண்ணில் இவர் செய்த சாதனைக்கு, இந்நேரம் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் கடந்த 10 மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.த்தால் கடந்த 10 மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா தொடர்
இதனால் வாஷிங்டன் சுந்தரின் டி20 உலகக் கோப்பை வாய்ப்பும் பறிபோனது. இந்த நிலையில், விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கி தனது உடல் தகுதியை வாஷிங்டன் சுந்தர் நிரூபித்தார். வழக்கம் போல் ரன்களும், விக்கெட்டையும் எடுத்தார்.,இதனால் அந்த ராஜாவை அப்படியே தூக்கிட்டு வாங்க டா என்பது போல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வானார்
Recommended Video

கொரோனா தொற்று
ஆனால் மீண்டும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ள வாஷிங்டன் சுந்தர், தென்னாப்பிரிக்க தொடரில் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் வேறு ஒரு மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்ய உள்ளது. இதனிடையே வாஷிங்டன் சுந்தர் வேறு ஏதேனும் வீரருடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து பி.சி.சி.ஐ.ஆலோசித்து வருகிறது.


Click it and Unblock the Notifications