சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு..! ஐசிசியை வெளுத்து வாங்கிய வாசிம் ஜாபர்.. கிரிக்கெட் செத்துவிடும்
மும்பை: ஐசிசியின் நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 90 ஓவர் வீசி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அதற்கு குறைவாக வீசியிருந்தால் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சம்பந்தப்பட்ட அணி வாங்கிய புள்ளிகள் குறைக்கப்படும்.

என்ன தவறு?
இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வாசிம் ஜாபர், ஐசிசியின் இந்த நடவடிக்கை சுத்த பைத்தியக்காரத்தனமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்,. டெஸ்ட் போட்டிகள் தற்போது எல்லாம் 4 நாட்களுக்குள் முடிந்துவிடுவதால், ஓவர் குறைவாக வீசினால் என்ன தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்பு
இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை குறைப்பதால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று வாசிம் ஜாபர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஓவர்ரேட்டால் வரவில்லை என்பதை ஐகிசி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

எச்சரிக்கை
உண்மையான ஆபத்தே பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தால் தான் உள்ளதாக வாசிம் ஜாபர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆடுகளம் அப்படி தயாரிக்கப்பட்டால் கிரிக்கெட் விரைவில் செத்துவிடும் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார். வாசிம் ஜாபரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

பாக் Vs ஆஸி டெஸ்ட்
போட்டிகள் முன்பே முடிந்த பிறகும் இந்தியாவின் புள்ளிகள் ஓவர் ரேட் விவகாரத்தில் குறைக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதே போன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்குள் 4 நாட்கள் ஆகிவிட்டது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications