
புது கேப்டன்கள்
தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுல் விலகிய பின்னர் இளம் வீரர் ரிஷப் உடனடியாக கேப்டனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா துணைக்கேப்டனாக தான் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ரிஷப் பண்ட்-ம் இல்லாததால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசீம் ஜாஃபர் அட்வைஸ்
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா விவகாரத்தில் பிசிசிஐ தவறு செய்துள்ளதாக முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா குறித்து பிசிசிஐ நன்றாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் ரோகித்திற்கு பின் கேப்டனாக செயல்படக்கூடிய திறமை அவரிடம் உள்ளது.

ஸ்பெஷல் திறமை
ஐபிஎல்-ல் அவர் கேப்டன்சி செய்த விதம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேப்டன் பணியை அனுபவித்து செய்தார். மேலும் வீரர்களிடம் இருந்து சிறந்த பங்களிப்பை பெற்றார். எனவே ரோகித் இல்லையென்றால், அந்த இடத்தில் இனி ஹர்திக் இருப்பது தான் சிறப்பாக இருக்கும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

பிசிசிஐ-ன் நிலைபாடு
பிசிசிஐ-ம் இதனை ஆலோசனை செய்து தான் வருகிறது. கே.எல்.ராகுலின் தலைமையில் இந்திய அணி மோசமான தோல்விகளை பெற்றது. தற்போது ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சியிலும் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே இந்த தொடரிலும் இந்திய அணி தோற்றுவிட்டால், நிச்சயம் ஹர்திக் பாண்ட்யா தான் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்படுவார்.


Click it and Unblock the Notifications











