
தொடர் சொதப்பல்
கடந்த இலங்கை தொடரில் சதம் அடித்திருந்த அவர், தனது ஃபார்மை நியூசிலாந்தில் காட்டவில்லை. முதல் போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 2வது போட்டியில் 109 என்ற எளிய இலக்கை விரட்டிய போதும், 9 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு முறையுமே மிட்செல் சாண்ட்னரிடம் தான் அவுட்டானார்.

ஜாஃபர் எச்சரிக்கை
இந்நிலையில் கோலிக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், நியூசிலாந்து தொடரில் விக்கெட்டான முறையை கண்டு கோலி நிச்சயம் வருத்தத்தில் இருப்பார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக நீண்ட நாட்களாக அவர் தடுமாறி வருகிறார். இங்கிலாந்தில் அடில் ரஷித், ஆஸ்திரேலியாவில் ஆடம் சாம்பாவிடம் வீழ்ந்தார். தற்போது மிட்செல் சாண்ட்னருக்கு எதிராக தடுமாறுகிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட்
3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி கம்பேக் தந்தே தீர வேண்டும். அதனை பெரிய போட்டிக்கான அடித்தளமாக தான் அவர் பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நாதன் லைன் என்ற ஸ்பின்னர் இருக்கிறார். அவருக்கு எதிராகவும் அவர் தயங்கலாம். எனவே அவர் அதற்காக தயாராக வேண்டும் என ஜாஃபர் கூறியுள்ளார்.

ஐசிசியின் விருது
இது ஒருபுறம் இருக்க 2022ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 3 வருடங்களாக ஃபார்ம் அவுட்டால் தவித்து வந்த விராட் கோலி ஆசிய கோப்பையில் 276 ரன்களை அடித்து 2வது அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை ( 296 ரன்கள் ) அடித்த வீரர் எனவும் பெருமை பெற்றார்.


Click it and Unblock the Notifications