For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தான் ஜெய்க்கும்.. ஆனால் ஒரு பெரிய தலைவலி இருக்கு.. வசீம் ஜாபர் கருத்து.. என்ன ஆச்சு?

மும்பை : இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷனாகா சதம் விளாசி அணியை 300 ரன்கள் எடுக்க வைத்தார்.

இது குறித்து பேசிய வசீம் ஜாஃபர் இலங்கை கேப்டன் ஷனாகாவை எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும்.

எல்லாம் பொய்யா கோபால்.. உம்ரான் மாலிக்கின் சாதனையில் குளறுபடி.. உண்மை தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்! எல்லாம் பொய்யா கோபால்.. உம்ரான் மாலிக்கின் சாதனையில் குளறுபடி.. உண்மை தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

தலைவலி

தலைவலி

ஏனென்றால் நீண்ட காலமாகவே ஒரு தலைவலியாகவே ஷனாகா இருந்து வருகிறார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. இந்தியா வெற்றி பெற்றாலும் ஷனாகா அதிரடி சதத்தை அடித்திருக்கிறார். ஷனாகாவை எதிர்கொள்ள இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.

யோசிக்க வேண்டும்

யோசிக்க வேண்டும்

எனவே ஷனாகாவை எப்படி அமைதியாக கட்டுப்படுத்தும் என்று இந்திய வீரர்கள் யோசிக்க வேண்டும். ஷனாகாவை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை இந்திய வீரர்கள் தயாரிக்க வேண்டும். இலங்கையை காட்டிலும் இந்திய அணியிடமே கூடுதலாக பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை ஷனாகா இலங்கை அணியின் நம்பர் ஐந்தாவது வீரராக பேட்டிங் வரிசையில் களமிறங்க வேண்டும்.

மாற்றி கொள்ளுங்கள்

மாற்றி கொள்ளுங்கள்

ஏனென்றால் பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட அப்போதுதான் அவருக்கு நேரம் கிடைக்கும். தற்போது ஆறாவது இடத்தில் ஷனாகா பேட்டிங் வரிசையில் விளையாடுகிறார். இதன் மூலம் அவர் பேட்டிங் தெரியாத பந்துவீச்சாளர்களுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஆட்டம் ஏற்கனவே தோல்வி நோக்கி சென்று கொண்டிருக்கும்.

இந்தியாவே வெல்லும்

இந்தியாவே வெல்லும்

இதனால் எந்த பயனும் இல்லை. முதல் போட்டியில் கூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஷனாகா அமைத்தாலும் அதில் அவருடைய பங்கு தான் அதிகமாக இருந்தது. எனவே பேட்டிங் வரிசையில் முன்னேறி விளையாடினால் அவருடைய இந்த பேட்டிங் இலங்கை அணிக்கு நிச்சயமாக உதவும். இதேபோன்று கொல்கத்தா ஒருநாள் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வசிம் ஜாபர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 11, 2023, 20:00 [IST]
Other articles published on Jan 11, 2023
English summary
Wasim Jaffer says shanaka became head ache for india team இந்தியா தான் ஜெய்க்கும்.. ஆனால் ஒரு பெரிய தலைவலி இருக்கு.. வசீம் ஜாபர் கருத்து.. என்ன ஆச்சு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X