
அக்ஷரின் செயல்பாடுகள்
இந்த போட்டியில் இந்தியாவின் தோல்வியை விட, அக்ஷர் பட்டேலின் போராட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீப காலமாக அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டிலுமே இந்திய அணியை காப்பாற்றி வருகிறார். முதல் போட்டியில் இந்தியா விக்கெட்களை இழந்து சரிந்த போது 20 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதே போல 2வது போட்டியில் 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்து கடும் போராட்டம் மேற்கொண்டார்.

ஜாஃபரின் பேச்சு
இந்நிலையில் அக்ஷர் பட்டேலின் செயல்படுகளால் இனி ஜடேஜா தேவைப்பட மாட்டார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3 வடிவ போட்டியிலும் அட்டகாச வீரராக உள்ள ஜடேஜாவை தற்போது இந்தியா மிஸ் செய்யவில்லை. அக்ஷர் பட்டேலின் ஆட்டத்தை கண்டவுடன் ஜடேஜா குறித்த பேச்சுகளே இல்லை. ஜடேஜாவை போன்றே ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்தது அதிர்ஷ்டமாகும்.

அக்ஷரின் செயல்பாடு
பவர் ப்ளேவில் பவுலிங் செய்யக்கூடிய ஸ்பின்னராக ஜடேஜா இருந்தார். ஆனால் தற்போது அக்ஷரும் செய்கிறார். இதே போல இக்கட்டான சூழலில் பேட்டிங்கும் செய்கிறார். எதாவது அடிக்க வேண்டும் என பேட்டை சுற்றாமல், சரியான பந்துகளை தேர்வு செய்து, அதனை சரியாக சிக்ஸருக்கு அனுப்புகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களை குறிவைத்து ஸ்ட்ரைட்டிலேயே அடிப்பது சிறப்பாக உள்ளது என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

ஜடேஜா உடல்நிலை
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக காலில் காயம் ஏற்பட்டு வெளியேறிய ஜடேஜா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார். இலங்கை தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் உடற்தகுதியை பெறவில்லை. எனவே அவர் நியூசிலாந்துடனான தொடருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











