
முதல் டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை சட்டீஸ்வர் புஜாரா 90 மற்றும் 102 ரன்களை அடித்து காப்பாற்றினார். ஆனால் புஜாராவை போலவே சுப்மன் கில்லும் 2வது இன்னிங்ஸில் சதமடித்து கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியிருந்தார். 130 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார்.

அடுத்த விராட் கோலி
இந்நிலையில் இவர் தான் இந்தியாவின் அடுத்த விராட் கோலி என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். சுப்மன் கில் தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளை தவறவிட்டார். ஆனால் தற்போது கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு கிளாசி ப்ளேயர் ஆகும். எனவே விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் ஜொலிக்கப்போவது சுப்மன் கில் தான். அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசால்ட்டாக விளையாடக்கூடிய விரர்.

2வது டெஸ்ட் போட்டி
வங்கதேசத்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது. ஒருவேளை ரோகித் ஓப்பனிங்கிற்கு வந்தாலும், சதமடித்த சுப்மன் கில்லை ஒதுக்க முடியாது. எனவே இருவரையும் ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு ஸ்பின்னரை குறைத்து விடுவார்கள். எனவே முதல் டெஸ்டில் விளையாடும் 3 ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிடுவார்கள் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

புஜாராவும் கம்பேக்
இந்திய அணியில் சட்டீஸ்வர் புஜாராவும் சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஸ், பண்ட், ஹர்திக் பாண்ட்யா என பலரும் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வந்து நின்றுள்ளதால் ப்ளேயிங் 11ல் பெரிய குழப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











