
ரன்குவிப்பு
இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச, டெஸ்ட் போட்டியில் ஒருநாள் ஆட்டம் இருவரும் விளையாடினர். குறிப்பாக ரோகித் சர்மா 6 பவுண்டரிகளை விளாசி 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாட் பாலில் ஆட்டமிழந்தார்.

மாயங் அவுட்
இதன் பின்னர் 3வது வீரராக விஹாரி களமிறங்கி ரன்களை சேர்த்தார். புஜாரா இடத்தில் முதல் முறையாக விளையாடும் விஹாரி, அவர் இல்லாத குறையை தீர்த்தார். விஹாரி அடித்த சில ஷாட்கள், புஜாராவுக்கு சிக்கலை தான் அதிகப்படுத்தின. மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய மாயங் அகர்வால் 33 ரன்களில் எல்.பி. டபிள்யூ ஆனார்.

உற்சாக வரவேற்பு
இதனையடுத்து, 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். அப்போது ரசிகர்களின் உற்சாக குரல் விண்ணை பிளந்தது.
My Man...🔥🖤🐆imVkohli#100thTestForKingKohli #ViratKohli100thTest #ViratKohli𓃵 #INDvSL pic.twitter.com/usGNHqwtiV
— PrAAveenMass (PraveenMass18vk) March 4, 2022

இலங்கை பிளான்
விராட் கோலி, ரன்களை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் மான் போல் துள்ளி குதித்து களத்திற்கு வந்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. கோலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகிறார். இதனால் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து கோலியை கட்டுப்படுத்த இலங்கை கேப்டன் கருணரத்னே முடிவு எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











