
செய்தியாளர்கள் கேள்வி
தங்களது அணி தோல்வியுற்ற விரக்தியில், ரமிஸ் ராஜா மைதானத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் தோல்வி குறித்து பல கேள்வியை எழுப்பினர். மைதானத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் இருந்ததால், இந்தியா, பாகிஸ்தான் இருத்தரப்பு தொடர் குறித்து பேசுனீர்களா என்ற கேள்வி எழுப்பட்டது.

கங்குலியிடம் பேசவில்லை
அதற்கு பதில் அளித்த ரமிஸ் ராஜா, இல்லை. நான் கங்குலியிடம் எதை பற்றியும் பேசவில்லை என்று பதில் அளித்தார். அப்போது இந்திய செய்தியாளர் ஒருவர், இந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் எதாவது சொல்ல விரும்புறீர்களா என்று கேட்டார்.

செல்போனை பிடுங்கினார்
அதற்கு, நீங்கள் இந்தியர் தானே. உங்களுக்கு பாகிஸ்தானின் தோல்வி மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பதில் அளித்தார். அப்போது அதற்கு அந்த செய்தியாளர், அப்படி எல்லாம் இல்லை என்று கூறிய உடன், திடீரென்று, இந்திய பத்திரிகையாளரின் செல்போனை ரமீஸ் ராஜா பிடுங்கினார்.
கண்டுகொள்ளாத கங்குலி
இதனையடுத்து, சுதாரித்து கொண்ட ரமிஸ் ராஜா, பத்திரிகையாளரிடமே செல்போனை கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரமிஸ் ராஜா வின் இந்த செயல் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் அந்த பத்திரிகையாளர் புகார் அளிக்க காததிருந்தார். ஆனால், கங்குலி அவரை சந்திக்காமலேயே சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications