
செல்ஃபிக்கு நோ
இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்தது. அப்போது மைதானத்தின் எல்லை கோட்டில் உள்ள Dug out இல் ருத்துராஜ் அமர்ந்து கொண்டு இருந்தார், அப்போது மைதான பராமரிப்பாளர் ஒருவர் திடீரென்று வீரர்கள் பகுதியில் நுழைந்து ருத்துராஜ் கெய்க்வாடிடம் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை பார்த்த ருத்துராஜ், மைதான பராமரிப்பாளரை நகர்நது செல்லும் படி சைகை காட்டினார்.

ருத்துராஜ் செயல்
ஆனால், அது பிறகும் அந்த நபர் செல்ஃபி எடுக்க முயன்றவுடன் ருத்துராஜ் வேறு இடத்திற்கு திரும்பிவிட்டார். இதனால் அந்த கிரவுண்ட்மேன் ஏமாற்றத்துடன் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவி வருகிறது. பொதுவாக கிரவுண்ட்ஸ் மேனுடன் அனைத்து வீரர்களும் நட்போடு பழகுவார்கள்.

வீரர்களின் நண்பர்கள்
2008ஆம் ஆண்டு சென்னை டெஸ்ட் போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்ற போது, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த மைதான பராமரிப்பாளர்கள் தான் சச்சினுக்கு ஓடி வந்து கை கொடுப்பார்கள், அவர்களுடன் சச்சினும் கை குலுக்குவார். தோனி, டிராவிட் போன்ற வீரர்களும் மைதான பராமரிப்பாளர்களுக்கு அவ்வப்போது பரிசுத் தொகையும் வழங்குவார்கள்.
கொரோனா காரணமா?
ஆனால் இது கொரோனா காலம் என்பதால் ருத்துராஜ் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். பிசிசிஐ தற்போது தீவிர பயோ பபுளை கடைப்பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வியும் எழுந்தது. ருத்துராஜ் இதுவரை 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இப்படி செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











