பெங்களூர்: இரண்டே இரண்டு பவுலர்களின் கடைசி ஓவர் பந்து வீச்சுதான் நேற்றைய ஐபிஎல் பைனலில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஒரு பவுலரால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றது. மற்றொரு பவுலரால்தான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி கண்டது.
ஐபிஎல் பைனலில் நேற்று, முதலில் ஹைதராபாத் அணி பேட் செய்தது. கடைசி ஓவரை ஷேன் வாட்சன் வீசினார். அந்த ஓவரில் கட்டிங் அதிரடி புண்ணியத்தால் 24 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி.
இதனால் ஹைதராபாத் அணி 208 ரன்கள் என்ற இமாலய ரன்னை எட்ட முடிந்தது. உளவியலாக 200 ரன்களுக்கு மேல் சென்றது ஆரம்பத்திலேயே பெங்களூர் அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதன்பிறகு பெங்களூர் அணி சிறப்பான தொடக்கம் கண்டபோதிலும், கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் புவனேஷ்வர் குமார் கடைசி ஓவரை வீசி அந்த 18 ரன்களை எடுக்க விடாமல் செய்தார். அந்த ஓவரில் 9 ரன்களை மட்டுமே புவனேஸ்வர்குமார் விட்டுக்கொடுத்தார்.
இவ்விரு பவுலர்களின் கடைசி ஓவர் பந்து வீச்சு மொத்த போட்டியின் ரிசல்டையும் முடிவு செய்தது.