நாக்பூர்: இந்திய வீரர்களின் அலட்சியமான பேட்டிங் காரணமாக அபாரமாக வென்றிருக்க வேண்டிய போட்டியை படு சாதாரணமாக இழந்தது இந்தியா.
தென் ஆப்பிரிக்காவை நேற்று நாக்பூரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்தது இந்தியா. இந்தியாவுக்கு சச்சினும், ஷேவாக்கும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 140 ரன்கள் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் அடித்து நொறுக்கியதால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் நிலை உருவானது.
பிரமாதமாக ஆடிய ஷேவாக் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் சச்சின் சிறப்பாக ஆடி 111 ரன்களைக் குவித்தார். இது அவருக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 99வது சதமாகும்.
