மேக்ஸ்வெல் பாராட்டு
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் மிரட்டலாக சதம் விளாசியது சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து வீரர் சூர்யகுமாரை பாராட்டி வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
இதுகுறித்து மேக்ஸ்வெல் பேசுகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியதை கவனிக்கவில்லை. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் கார்சை ஆரோன் ஃபின்ச் எனக்கு அனுப்பினார். அப்போது சூர்யகுமார் 50 பந்துகளில் சேர்த்த ரன்களுக்கும், மற்ற வீரர்களின் ரன்களுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.
வேற்று கிரகவாசி
வேறு கிரகத்தில் பிறந்தவர் போல் விளையாடினார். அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சூர்யகுமார் ஆடிய இன்னிங்ஸின் வீடியோவை பார்த்து மிரண்டே போனேன். ஏனென்றால் அனைத்து வீரர்களையும் கடந்து மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு அருகில் இப்படியான ஷாட்களை விளையாடக் கூடிய வீரர்கள் தற்போது யாரும் இல்லை என்று தெரிவித்தார்.
பணம் இல்லை
தொடர்ந்து சூர்யகுமார் யாதவிற்கு பிக் பாஷ் கிரிக்கெட் ஒப்பந்தம் கிடைக்குமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு போதிய பணம் யாரிடமும் இல்லை. அதனால் அதற்கு வாய்ப்பு இல்லை. அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் வெளியேற்ற வேண்டும் என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.