
சிட்னியில் அடுத்த போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான அடுத்தடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக 2 போட்டிகளை இரு அணிகளும் எதிர்கொள்ள உள்ளன. அடுத்த போட்டி வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தவிப்பு
முன்னதாக நடைபெற்று முடிந்துள்ள இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் சொதப்பலான ஆட்டங்களையே தந்துள்ளனர். இரு போட்டிகளிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களையும் லாபுசாக்னே 129 ரன்களையும் அடித்துள்ளனர். ஒற்றை இலக்க எண்களிலிருந்து ஸ்மித் மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறார்.

பொறியில் மாட்டிக் கொள்கிறோம்
இந்நிலையில் இந்திய அணியின் ஸ்பின்னர் ரவி அஸ்வின் மிகவும் சிறப்பான பௌலர் என்றும் அவர் மிகுந்த தயாரிப்பு மற்றும் திட்டங்களுடன் போட்டிகளை அணுகுவதாகவும் லாபுசாக்னே தெரிவத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவரின் செயல்திட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பொறியில் மாட்டிக் கொள்வதை போல வீழ்வதாக தெரிவித்தார்.

சவாலாக உள்ளது
இந்திய பெலளர்களின் இடது பக்க ட்ராப் மிகவும் சவாலாக உள்ளதாகவும் அந்த பந்துகளில் பவுண்டரிகளை அடிப்பது மட்டுமின்றி சுழற்றி அடிப்பதும் சிரமமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இந்திய பௌலர்கள் இந்த தொடரில் சிறப்பான திட்டங்களுடன் வந்துள்ளதாகவும் ஆப்சைடில் ரன் எடுப்பதற்கான வாய்ப்பை அவர்கள் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











