For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க மேல எங்களுக்கு சந்தேகமே கிடையாது.. பேட்டிங்ல பொளந்து கட்டிட்டாங்க.. ஹர்திக் பாராட்டு!

ஃபுளோரிடா: இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஹெட்மயரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஹெட்மயர் 61 ரன்கள் சேர்த்தார்.

We have no doubt in Yashasvi Jaiswal and Shubman gill Skill says Hardik Pandya

இதன்பின் சவாலாக இலக்கை நோக்கி களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் சாதனை படைத்து அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரி, சிக்சர் அடிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இதனால் இந்திய அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டல் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்களும், சுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர்.

இந்த வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், இந்தப் போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி இருவரின் திறமை மீதும் எங்களுக்கு கொஞ்சம் கூட எந்த சந்தேகமும் இல்லை. என்னை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் குழுவாக இணைந்து பொறுப்பேற்று, பந்துவீச்சாளர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டின் எந்த வடிவமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்களால் தான் வெற்றியை கொடுக்க முடியும்.

அவர்கள் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினால், ஆட்டத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் இந்த அனலில் இரு பேட்ஸ்மேன்கள் ஓடி அதிக ரன்கள் சேர்த்தது பாராட்டுக்குரியது. அதேபோல் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பையும் எடுத்தது மகிழ்ச்சியே. நான் எப்போதும் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே கேப்டன்சியை அணுகுவேன். நாங்கள் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு, எங்களின் தவறுகளே காரணம். இரு போட்டிகளிலும் கடைசி 4 ஓவர்களில் சொதப்பி தோல்வியை அடைந்தோம்.

ஆனால் அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்ற போதும் பெரிதாக எதையும் மாற்றிடவில்லை. இங்கு ஆடிய அனைத்து போட்டிகளுமே எங்களின் மன உறுதியை அதிகரித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் அபாயகரமானவை. எப்போதும் எதிரணியை மதிக்க வேண்டும். 2-0 என்ற நிலையில் இருந்து 2-2 என்ற கொண்டு வந்திருக்கிறோம். மீண்டும் வெற்றிபெறுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 13, 2023, 7:33 [IST]
Other articles published on Aug 13, 2023
English summary
IND vs WI: Indian Captain Hardik Pandya Said, We have no doubt in Jaiswal and Gill Skill. The way they are playing, its very pleasing to us.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+