
மூன்று தவறுகள்...
ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் மூன்று அல்லது நான்கு தவறுகள் செய்கிறோம். அது தான் இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அதிர்ச்சியடையவில்லை...
ஆனால் தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்த ஆட்டத்தில் தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று நம்புகிறேன். இந்த தோல்வியால் நான் அதிர்ச்சி அடையவில்லை.

தவறான கணிப்பு...
சிறிய இலக்கை வைத்துக் கொண்டு எங்களது வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது.அப்ரிடி அதிரடி ஆட்டக்காரர். ஆனால் கேரம் வகை பந்து வீசும் போது, அவர் தவறாக கணித்து விளையாடினால், வெற்றி எங்கள் வசம் வந்து விடும் என்று நினைத்தோம்.

அப்ரிடியே காரணம்...
அஸ்வினும் கடைசி ஓவரை வீசுவதில் ரொம்ப நம்பிக்கையுடன் இருந்தார். இதனால் தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர்குமார், முகமது ஷமியின் ஓவர்களை முன்கூட்டியே முடித்தோம். ஆனால் அப்ரிடி பந்தை எளிதாக எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்து விட்டார்.

சவாலான ஸ்கோர்....
இந்த ஆடுகளத்தில் 260 முதல் 270 ரன்கள் வரை எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்' என இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications