மாற்றங்கள் இரண்டு
இதே போல் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியும் 2 மாற்றத்துடன் களமிறங்குகிறது. மொயின் அலிக்கு பதிலாக லியாம் ப்ளங்கட் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத அதிரடி வீரர் ஜேசன் ராய் இன்றைய போட்டியில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார்.
பிரச்னை கிடையாது
டாசில் தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: டாசில் தோல்வி. அது ஒரு பிரச்னை கிடையாது. சேசிங்கை விரும்புகிறவர்கள் நாங்கள். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால்... டாசில் வென்றால் நாங்களும் முதலில் பேட் செய்ய தான் தீர்மானித்திருந்தோம்.
வெற்றி தான் நோக்கம்
இந்த தொடரில், முதல் போட்டியை தவிர எந்த ஆட்டத்திலும் நாங்கள் சேசிங் செய்ய வில்லை. ஆகவே, இந்த போட்டி சவால் நிறைந்தது.எதிரணி யார் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆட்டத்தில் வெற்றி பெறுவது ஒன்று தான் எங்களின் நோக்கம்.
ரிஷப் பன்ட் சேர்ப்பு
இந்த போட்டியில் விஜய் சங்கர் இல்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் என்ன செய்வார் என்பது எல்லோரும் பார்க்க இருக்கிறோம். பயமில்லாதவர், துணிந்து ஆடக்கூடியவர் ரிஷப் பன்ட். பாகிஸ்தானும் ஆதரவு தெரிவிக்கிறது. நிச்சயம் வெல்வோம் என்றார்.