
264 ரன்கள்
மேத்யூஸ், திரிமன்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. திரிமன்னே 53 ரன்கள் எடுத்து குல்தீப் ஓவரில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடி சதம் அடித்தா மேத்யூஸ் 113 (128) ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது.

வென்றது இந்தியா
265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடினர். ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் விளாசினார். 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து ஆடிய லோகேஷ் ராகுல் 128 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். விராட் கோலி 34 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

பாகுபாடு கிடையாது
போட்டிக்கு பின் வெற்றி குறித்து கோலி கூறியதாவது: அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. சிறிய அணி, பெரிய அணி என்ற பாகுபாடு இல்லை. ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்றுதான் ஆஸ்திரேலிய அணியும் ஒன்றுதான்.

எளிதில் வீழ்த்துவோம்
யாரும், யாரை வேண்டுமானாலும் எளிதில் வீழ்த்தலாம், அன்றைய போட்டியில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவர்களுக்கே வெற்றி. எதிரணி யார் என்பது கவலை இல்லை. அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட முயற்சிப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications