பிட்ச் குற்றச்சாட்டு
அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். இதனால் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. 3வது டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்தும் வெளியேறியது. இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பு உள்ளது.
பாதிக்குமா?
அகமதாபாத் பிட்சை மோசமான பிட்ச்சாக அறிவிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. ஆனால் இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எந்த புள்ளிகளும் குறையாது. ஏனென்றால் பிட்ச் குறைபாட்டால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் தான் புள்ளிகள் குறைக்கப்படும் என தெரியவந்துள்ளது.
சாதிக்குமா இந்தியா
இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும். ஒரு வேளை தோல்வியடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி நுழைந்து விடும். இதனால் அடுத்த போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.