மொகாலி: நாளைய இந்தியா-ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டால் எந்த அணி, அரையிறுதிக்கு செல்லும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
உலக கோப்பை டி20 தொடரின், சூப்பர்-10, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும். தோற்கும் அணி வெளியேற வேண்டிவரும். எனவே இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒருவேளை நாளை, போட்டி நடைபெறும் மொகாலியில் மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால், அப்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இதனால் இவ்விரு அணிகளின் மொத்த புள்ளியும் 5-ஆக மாறும்.
அந்த சூழ்நிலையில், தலா 5 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியாவில் எந்த அணி நிகர ரன் விகிதத்தில் கூடுதலாக உள்ளது என்று பார்க்கப்பட்டு, அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.
தற்போதுள்ள நிலையில் இந்திய அணியின் நிகர ரன் ரேட் -0.546 என்ற அளவிலும், ஆஸ்திரேலியாவின் நிகர ரன் ரேட் +0.440 என்ற அளவிலும் உள்ளது. எனவே மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
மொகாலியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை இலாகா அறிவித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாகும்.