கண்ணாடியில் பார்த்தால் தாடியில் ஒரே நரை முடியாக உள்ளது: டோணி கலகல
டெல்லி: கண்ணாடியை பார்த்தால் தாடியில் நரை முடி அதிகம் இருப்பது தெரிகிறது என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜொஹன்னஸ்பர்க்கில் டுவென்டி டுவென்டி உலக கோப்பையை டோணி தலைமையிலான இந்திய அணி வென்றது.
அதன் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்று கேட்டதற்கு டோணி கூறுகையில்,

மீடியா
அப்போதை விட தற்போது அதிக மீடியாக்களை என்னால் பார்க்க முடிகிறது. அப்போது டுவென்டி டுவென்டி உலகக் கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

டி20
டுவென்டி டுவென்டி ஆட்டம் பற்றி அனைவரும் காமெடியாக பேசினார்கள். அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம்
காலம் ஓடிவிட்டது. பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.
ஒருவரின் ஆட்டத்தை ரன்களை வைத்து மட்டுமே தீர்மானிக்கக் கூடாது.

தாடி
கண்ணாடி முன்பு நின்று பார்த்தால் தாடியில் நிறைய வெள்ளை முடி இருப்பது தெரிகிறது என்று கூறி சிரித்தார் டோணி.


Click it and Unblock the Notifications