வாறீக.. போறீக... என்னா அடி... இது முத்துபாண்டி கோட்டைடி!
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நேற்று இந்தூரில் நடந்த போட்டியில் பஞ்சாப் வென்றாலும் கூட ரசிகர்களை வென்றவர் பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ்தான்.
ஆரம்பத்தில் மகா நிதானமாக ஆடியவர் வில்லியர்ஸ். ஏன் இப்படி நிதானம் காட்டுகிறார் என்று அத்தனை பேரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அடித்து ஆடினார் பாருங்கள்.. அடேங்கப்பா.. பஞ்சாப் பவுலர்கள்.. அயயோ அப்பா ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் டிவில்லியர்ஸின் ஆட்டம் போதுமானதாக இல்லை. காரணம் இந்த அதிரடியை ஆரம்பத்தில் அவர் காட்டியிருந்தால் மற்ற வீரர்கள் சற்று நின்று ஆட முயற்சித்திருக்கக் கூடும். அணிக்கும் சற்று கூடுதல் ஸ்கோர் கிடைத்திருக்கக் கூடும்.
டிவில்லியர்ஸின் அதிரடியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதிலிருந்து சில..
மச்சி அது நிலா இல்லை!
அது நிலா இல்லப்பா. வில்லியர்ஸ் அடிச்ச பந்துதான்.. நிலாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இது ஜடேஜா கலாய்!
இது முத்துபாண்டி கோட்டைடி
இது முத்துப்பாண்டி கோட்டைடி... நிஜம்தான். அடித்த அடியும், ஆடிய ஆட்டமும், குவிந்த ரசிகர்களும் அப்படித்தான் நினைக்க வைத்தன. ஆனால் கடைசியில் ஜெயிச்சது என்னவோ கில்லியாச்சே!

விளாடுறது இந்தூர்ல
உண்மைதான். நேற்று ரசிகர்கள் ஆதரவு என்னவோ பெங்களூரு அணிக்குத்தான் ஏகமாக இருந்தது. ஆனால் ஜெயிக்காம போயிருச்சே.

சிங்கம் களம் இறங்கிருச்சே
டென்ஷனாகிக் கிடந்த பெங்களூரு ரசிகர்களுக்கு குஷியைக் கொடுத்த டிவில்லியர்ஸ்.

என்னா அடி!
ஹாஹாஹா.. சுத்தி வளைச்சுக் கேட்டாலும் அதே பதில்தான் கிடைக்கும் பாஸ்.. என்னா அடி!

வாறீக.. போறீக!
செம.. நோ விளக்கம்!

நாட் எனஃப்!
பத்தலை. எனக்குப் பத்தலை.. இந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வருது.

இப்பப் பாருடா!
ஆகட்டும்டா.. முடியட்டும்டா.. இப்பப் பாரு நம்மை ஸ்டைலை.. நிஜமாவே இதுதாய்யா நடந்துச்சு நேத்து!

ஹிஹி...ஆ!
டிவில்லியர்ஸ் அடித்துப் பிரித்தபோது சிரித்த முகங்கள்.. அது அந்த அணிக்குப் பலன் தராதபோது கடுகடுத்து கவிழ்ந்த காட்சி!


Click it and Unblock the Notifications