
ஐயருக்கு பதவி உயர்வு
டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தக்க வைத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் புதிய கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ரிஷப் பந்த் இதுவரை 227 ரன்கள் எடுத்து தக்க வைத்ததை நியாயப்படுத்தியுள்ளார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ், 46 ரன்களும் மூன்று விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நிரூபித்த நரேன், ரசல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்திய வீரர்களை தவிர்த்து, சுனில் நரேன், ஆந்தரே ரசல் என்ற இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்தது. இருவரும் மோசமான தேர்வு இல்லை என்பதை இதுவரை நிரூபித்துள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட்ட ஒரே வீரான அக்சர் படேல், முதல் ஆட்டத்தின்போது காயமடைந்தார். சீசனின் கடைசி சில ஆட்டங்களுக்கு அவர் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கும் மும்பை வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா, ஜஸ்பிரித் பும்ராவை தக்க வைத்தது. இந்த சீசனில் மும்பை அணி மிகச் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், மூவரும் தங்களுடைய தேர்வு சரிதான் என்பதை நிரூபித்து வருகின்றனர். பாண்டயா பேட்டிங்கில் பெரிய அளவுக்கு சாதிக்கவில்லை.

ராஜஸ்தான், ஹைதராபாத்துக்கு ஏமாற்றம்
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், அவர் இந்த சீசனில் விளையாடவில்லை. இதேபோன்ற நிலையில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ஏற்பட்டது. அணிக்காக தக்க வைக்கப்பட்ட டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டார். அதே நேரத்தில் அணி தக்க வைத்த மற்றொரு வீரரான புவனேஸ்வர் குமார், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
