For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக் குழு தலைவர் பதவி.. தயங்கும் இந்திய ஜாம்பவான்கள்.. காரணமே வேற பாஸ்!

மும்பை: இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் இந்த பதவிக்கு ஜாம்பவான் வீரர்கள் விண்ணப்பிக்க தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்ட சேத்தன் சர்மா ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியதால், தானாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேர்வுக் குழு தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட ஏராளமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதனால் இந்திய அணியை தேர்வு செய்வது யார் என்றும், அடுத்த தேர்வுக் குழு தலைவரை பிசிசிஐ எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்தது.

why former Indian big names are not interested in BCCI chairman of Selector Job

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி காரணமாக தேர்வுக் குழு தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுக் குழு தலைவரை நியமிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு இந்திய ஜாம்பவான் வீரர்கள் வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் 2008ல் இந்திய ஜாம்பவான் திலீப் வெங்சர்கார், 2011ல் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்டனர்.

அதன்பின்னர் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிசிசிஐ ஆண்டுக்கு ரூ.1 கோடி வரையில் ஊதியமாக வழங்குகிறது. அதேபோல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ரூ.90 லட்சம் வரை ஊதியமாக பெறுகிறார்கள்.

ஐபிஎல் வர்ணனை, விளம்பரங்கள், அகாடமி உள்ளிட்டவை மூலம் ஈட்டும் வருமானத்தை விடவும் தேர்வுக் குழு தலைவருக்கு கிடைக்கும் வருமானம் குறைவு என்பதால் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் தயங்குவதாக பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் பதவிக்கு ஓடி வந்து விண்ணப்பிக்கும் ஜாம்பவான் வீரர்கள், தேர்வுக் குழு தலைவர் பதவிக்கும் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Friday, June 23, 2023, 10:25 [IST]
Other articles published on Jun 23, 2023
English summary
Low salary is the Main Reason for Former Indian players showing no interest for the role of BCCI Chairman of Selector. BCCI is giving around Rs.1 Crore per year as the salary for the Chairman of Selector.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+