டாக்கா: வங்கதேசத்திடம் முதல் ஒரு நாள் போட்டியில் தோற்றுப் போனதற்கு ஏகப்பட்ட காரணங்களை கையில் லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது இந்திய அணி. அடடே இவ்வளவு நடந்து போச்சா.. அச்சச்சோ என்று ரசிகர்கள் இதை நம்பி ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் காரணங்களைக் கூறுகிறது இந்திய அணி.
இரு அணிகளும் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின. போட்டி டிரா ஆனது.
அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. நேற்று முதல் போட்டி நடந்தது. பிரமாதமாக பேட் செய்த வங்கதேசம் 307 ரன்களைக் குவித்தது. இந்தியாவும் நன்றாகத்தான் சேஸிங்கைத் தொடங்கியது. ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்தவர்கள் காலரா வந்த கோழி போல ஒடுங்கிப் போய் ஓடி போய் விட்டனர்.

பொறுப்பே இல்லாமல் ஆடியவர்கள்தான் நேற்று இந்திய அணியில் அதிகம். முன்னணி வீரர்கள் பலரும் நேற்று சரிவர சோபிக்கவில்லை. விளைவு கேவலமான தோல்வியில் போய் முடிந்தது. தோல்வி குறித்து கேப்டன் டோணி நிறையக் காரணங்களை அடுக்கியுள்ளார். அதிலிருந்து சில...
இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் நடுவர் செய்த குழப்பம் வேறு பிடுங்கித் தின்றது.
இந்தியா பேட் செய்தபோது 10வது ஓவரின்போது வங்கதேச கேப்டன் மோர்தசா பந்து வீசினார். அதை எதிர்கொண்ட ஷிகர் தவான் அடித்தார். அது நேராக விக்கெட் கீப்பரிடம் போனது. ஆனால் கீப்பர் முஷிபிகுர் ரஹீம் கேட்ச் பிடிக்காமல் விட்டு விட்டார்.
இதை நடுவர் கவனிக்கவில்லை. டக்கென விரலை உயர்த்தி விட்டார் மேல் நோக்கி. ஆனால் தான் செய்த தவறை உணர்ந்ததும் உடனே நாட் அவுட் என்று அறிவித்தார். இந்த சமயத்தில் தவான் சற்று கிரீஸை விட்டு நகர்ந்து போயிருந்ததைப் பயன்படுத்தி ஸ்டம்ப்பை நோக்கி பந்தை வீசி ரன் அவுட்டாச்சும் கொடுங்க என்று வங்கதேச வீரர்கள் முட்டாள்தனமாக கேட்க, நடுவர் நிராகரித்து விட்டார்.