
விக்கெட்
இந்த நிலையில் இந்திய அணியில் இந்த மாற்றங்களை செய்தது ஏன் என்று கோலி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், கடந்த போட்டியில் நாங்கள் தேர்வு செய்த அணிக்கும் இப்போது தேர்வு செய்த அணிக்கும் நிறைய காரணம் இருக்கிறது . கடந்த போட்டியில் அக்சர் காயம் அடைந்ததால் வேறு வழி எங்களுக்கு இல்லை .

ஏன்
பும்ராவிற்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். இதனால் சிராஜ் வருகிறார். பும்ராவிற்கு அதிகமாக வொர்க் லோட் கொடுக்க கூடாது என்பதால் ஓய்வு கொடுத்து இருக்கிறோம். வாஷிங்க்டன் சுந்தர் கடந்த போட்டியில் நன்றாக ஆடினார். ஆனாலும் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

மாற்றம்
இந்த நிலையில் கோலிக்கு வாஷிங்க்டன் சுந்தரின் அப்பா போன் செய்ததாகவும், என்னுடைய மகன் செஞ்சுரி அடிக்கவில்லை. அதனால் அவரை அணியில் எடுக்காதீர்கள் என்று கூறியதாகவும் சிலர் கிண்டலாக டிவிட் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டிலும், இங்கிலாந்து டெஸ்டிலும் சுந்தர் செஞ்சுரியை நழுவவிட்டார்.

சுந்தர்
இதை சுந்தரின் அப்பா விமர்சனம் செய்து இருந்தார். இதை கிண்டல் செய்யும் விதமாக தற்போது பலர் டிவிட் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் கோலியின் இந்த முடிவிற்கு வேறு காரணம் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இவர் சரியாக பவுலிங் செய்யவில்லை.

உண்மையான காரணம்
சென்னை பிட்சில் இவரால் பேட்டிங் செய்ய முடிந்த அளவிற்கு விக்கெட் எடுக்க முடியவில்லை. அதேபோல் குல்தீப், அஸ்வின், சுந்தர் மூன்று பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பவுலிங் செய்வார்கள். இதனால் பேட்ஸ்மேனுக்கு வெளியே பவுலிங் செய்யும் அக்ஸரை உள்ளே கொண்டு வந்து சுந்தரை கோலி நீக்கி உள்ளர்.


Click it and Unblock the Notifications