Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது சிராஜ் ஏன் இல்லை? வசீம் ஜாபர் கேள்வி

மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரை, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரே இந்திய அணியின் புதிய பந்து வீச்சாளர்களாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போட்டியில் 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடுமையாக போராடிய போதிலும், 360/7 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கிடையே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. தனது யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய ஜாபர், ஒருநாள் கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

Mohammed siraj

"முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை என்பது எனக்கு புரியவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இதுதான் நமது முதன்மையான பந்துவீச்சு கூட்டணியாக இருக்க வேண்டும். எனது கணிப்பில், சிராஜும் பும்ராவும் புதிய பந்தில் பந்துவீச்சைத் தொடங்க வேண்டும்."

இது எல்லாம் ஒரு பவுலிங்கா? ரொம்ப மோசம்..ஜோ ரூட்டை ஒரு முறை கூட அவுட்டாக்கவில்லை- இர்பான் பதான் சாடல்

இது எல்லாம் ஒரு பவுலிங்கா? ரொம்ப மோசம்..ஜோ ரூட்டை ஒரு முறை கூட அவுட்டாக்கவில்லை- இர்பான் பதான் சாடல்

"டி20 அல்லது ஒருநாள் போட்டிகள் எதுவாக இருந்தாலும், பும்ரா விளையாடாத போது நமது பந்துவீச்சு மிகவும் அனுபவமற்றதாக மாறிவிடுகிறது. சிராஜ் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நிச்சயம் உலகக் கோப்பை திட்டங்களில் ஒரு பகுதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமையான பந்துவீச்சாளர் மற்றும் அணிக்காக தனது முழு பங்களிப்பையும் வழங்குபவர்."

சிராஜ் இதுவரை 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.32 சராசரி, 29.6 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 5.13 எகானமியுடன் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/21 ஆகும்."பிரார் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவே நான் கருதினேன். அவர் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருந்தாலும், அவரிடம் உள்ள திறமையை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த பவுலிங்கை வைத்து 2027 உலககோப்பையை எல்லாம் இந்திய அணியால் வெல்ல முடியாது.. புஜாரா சாடல்

இந்த பவுலிங்கை வைத்து 2027 உலககோப்பையை எல்லாம் இந்திய அணியால் வெல்ல முடியாது.. புஜாரா சாடல்

அவர் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார், சரியான லெந்த்தில் வீசினால் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், ஒட்டுமொத்தமாக இந்த பந்துவீச்சு வரிசையில் பல கேள்விகள் உள்ளன. அர்ஷ்தீப் அல்லது பிரின்ஸ் யாதவ் பற்றி பேசினாலும், குறிப்பாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்றே நான் கூறுவேன்" என்றார். இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் ஜூலை 23 அன்று தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

Story first published: Monday, July 20, 2026, 17:30 [IST]
Other articles published on Jul 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+