
வாய்ப்பை கோட்டைவிட்டார்
இந்நிலையில் ரிஷப் பன்ட் தமக்கு விட்ட கேட்சை அருமையான வாய்ப்பு என்பதை பற்றி நினைத்து, அதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 32 ரன்கள் எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார். அந்த விக்கெட்டுக்கு பிறகே களத்தில் தோனி இறக்கப்பட்டார்.

தோனி இடம்
பொதுவாகவே, கள நிலவரத்துக்கு ஏற்ப, 5, 6, அல்லது 7ம் நிலையில் தோனி இறக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் மாற்றி இறக்கப்பட்டார் தோனி. இது பலருக்கு ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியது.
மஞ்சரேக்கர் பதில்
இதே கேள்வியை வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்டுவிட்டு, தானே அதற்கு டுவிட்டரில் பதிலும் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: சரி, தோனிக்கு முன்பாக பாண்டியா ஏன் இறக்கப்பட்டார் என்று நான் யூகிக்க முயற்சிக்கிறேன்.

தாக்குதல் ஆட்டம்
தாக்குதல் ஆட்டமா? அல்லது தடுப்பாட்டமா என்று வரும் போது, கோலி எப்போதும் தாக்குதல் ஆட்டத்தையே மேற்கொள்வார். அதனால்தான் தோனிக்கு முன்பாக பாண்டியா இறக்கப்பட்டுள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications