பாக். வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் பிரிவினைவாதி.. நறுக்கென கொட்டிய கம்பீர்
டெல்லி: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை காஷ்மீர் பிரிவினைவாதி மிர்வய்ஸ் உமர் பாரூக், கொண்டாடியதை கவுதம் கம்பீர் கேலி செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறித்து, மிர்வய்ஸ் உமர் பாரூக் டிவிட் செய்கையில், எங்கு பார்த்தாலும் பட்டாசு வெடித்துக்கொண்டுள்ளனர். ரம்ஜான் விரைவிலேயே வந்ததை போல உள்ளது. சிறந்த அணி அந்த நாளை வென்றுவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். இவவ்வாறு அவர் டிவிட் செய்திருந்தார்.

இலங்கையை பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் வென்றபோதும் இப்படி அவர் டிவிட் செய்திருந்தார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் தனது டிவிட்டில் ஏன் நீங்கள் எல்லையை கடக்க கூடாது? ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு சிறந்த பட்டாசு வெடிப்புகள் அங்கு நிகழும். நான் உங்களை பேக் செய்து அனுப்ப உதவுகிறேன். இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
Story first published: Monday, June 19, 2017, 9:55 [IST]
Other articles published on Jun 19, 2017


Click it and Unblock the Notifications