"வாழ்த்திய" அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
சென்னை: வங்கதேசத்தை "வாழ்த்தியும், உயர்த்தியும்" பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் ஏகப்பட்ட ட்ரோல்கள்.. ஆனால் வங்கதேச பவுலர்களிடம் இந்தியா திணறி வந்ததைப் பார்த்தபோது இந்த "உழைப்பெல்லாம்" வீணாகி விடுமோ என்ற அச்சம் வரத்தான் செய்தது. ஆனால் கடைசியில் பவுலிங்கை வைத்து அசத்தி விட்டது இந்தியா.
பச்சை சட்டை போட்டா அடிப்போம் என்று ரசிகர்கள் வீராவேசம் பேசி வருகிறார்கள். பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் பச்சை சட்டை அணிகளை சீண்டி வருகிறார்கள், இந்தியாவை உயர்த்தி வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் வங்கதேசத்தையும் கடந்த சில நாட்களாக வறுத்தெடுத்து வந்தனர். இன்று நடந்த வங்கதேசப் போட்டி குறித்தும் கூட ஏகப்பட்ட ட்ரோல்கள்.
இன்று வங்கதேசத்திடம் இந்தியா தடுமாறுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது 35 ஓவர்களைத் தண்டியும் கூட இந்தியா 200 ரன்களைத் தாண்டாமல் இருந்தது. இதே ரேஞ்சில் போனால் இந்தியாவால் 300 ரன்களைத் தொட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் கடைசி நேரத்தில் துடிப்பாக ஆடி விட்டனர் இந்தியர்கள்.
எப்படியோ போட்ட படங்கள் வேஸ்ட் ஆகவில்லை என்ற வரையில் இந்திய ரசிகர்களுக்குச் சந்தோஷம்தான்!


Click it and Unblock the Notifications