
எப்படி
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த விரக்தியில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலிய அணி கனவு கண்டது. ஆனால் களத்தில் மிகவும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி ஷாக் கொடுத்தது.

திட்டம்
மிக சிறப்பான திட்டமிடலுடன் களத்திற்கு வந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கண்டிப்பாக வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இதற்காக புதிய அணியை ஆஸ்திரேலியா களமிறக்க உள்ளது.

ஆஸ்திரேலியா
அதன்படி ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் வில் புக்கோவஸ்கி இணைய உள்ளனர். ஜோ பர்ன்ஸ்,டிராவில் ஹெட் ஆகியோர் ஆணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர் என்று கூறப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஹெட் நன்றாக ஆடினாலும் வில் புக்கோவஸ்கிக்கு வாய்ப்பு கொடுக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

எப்படி
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், வார்னர், மாரன்ஸ், ஸ்மித், வில் புக்கோவஸ்கி, கேமரூன் கிரீன் , டிம் பெயின், பாட கும்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லைன், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் களமிறங்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

பயிற்சி
இதற்காக இந்த வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆஸ்திரேலிய பவுலர்கள் கூடுதல் நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறியது போல அடுத்த போட்டியில் திணற கூடாது என்று அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது.


Click it and Unblock the Notifications