கோடானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று- எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ் ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.
